jueves, 16 de febrero de 2012

மருதடி வாழ் இளைஞர், யுவதிகளுக்கு ஒரு வேண்டுகோள்

எம்மூரில் நடைபெறும் பொதுவான நிகழ்வுகள் அதன் புகைப்படங்கள், ஒளிப்படங்கள் போன்றனவற்றை இந்த வலைத்தளத்தில் இடுவதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் எம் ஊர் உறவுகள் அதைப்பார்த்து மனம் மகிழுவர். அவ்வாறான நிகழ்வுகள் அதன் புகைப்படங்கள், ஒளிப்படங்கள் போன்றனவற்றை இந்த வலைத்தளத்தில் இடுவதற்கு அவற்றை தந்துதவுமாறு எம் ஊர் இளைஞர் யுவதிகளிடம்  பணிவாக கேட்டுக்கொள்கின்றேன். அது மட்டும் அல்லாமல் எம் ஊர் இளைஞர் யுவதிகளின் தனிப்பட்ட ஆக்கங்களான கவிதை , சிறுகதை, கட்டுரை, விஞ்ஞானம் சார்ந்த விடயங்கள் ,கணணி சார்ந்த விடயங்கள் மேலும் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் விடையங்களையும் எழுதி அனுப்பலாம். இதன்மூலம்ஒருவர் தனது தனிப்பட்ட திறமைகளை  வளர்த்துக்கொள்ளவும் முடியும், அவரது திறமையை மற்றவர் அறிந்து கொள்ளவும் முடியும்.  அத்தோடு எம் ஊரின் வலைத்தளமான இந்த மருதடி வலைத்தளத்தை வளர்க்கவும் முடியும் என நான் நம்புகின்றேன். எனவே இதை எல்லோரும் விரும்பி செய்வீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். உங்கள் எல்லோரது உதவியையும் எதிர்பார்த்து காத்திருக்கும்  உங்கள் ஊரின் இளைஞன்(உங்கள் ஊரில் 11வருடம் வசித்த உரிமையில் அவ்வாறு எழுதுகிறேன்)
த.ஸ்ரீதர்
நன்றி

2 comentarios: