miércoles, 22 de febrero de 2012

உங்கள் கணணி பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கிவிட்டீர்களா ! இதுக்கு உங்கள் பதில் ஆம் என்றால்... இனி உங்கள் கம்ப்யூட்டரை பாதுக்காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

இதுவரை நீங்கள் எப்படி இருந்தாலும் சரி இனி உங்கள் கம்ப்யூட்டர் விசயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். அதாவது நீங்கள் கஷ்டப்பட்டு விலை அதிகம் கொடுத்து வாங்கிய உங்கள் கம்ப்யூட்டரின் முக்கியமான ஹார்டுவேர் பாகங்களை இன்னொருவர் உங்களுக்கு தெரியாமல் எடுத்துக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது அதனை சரி செய்ய கடை காரரிடம் கொடுப்பதற்க்கு முன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டுவேரை பற்றிய குறிப்புகளை நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் கம்ப்யூட்டர் சரி செய்து வந்த பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்கு உள்ளே உள்ள ஹார்டுவேர்கள் ( Mother Board, Processor, Ram, Hard Disk)அனைத்தும் முன்பு இருந்தவைதான் இப்பொழுதும் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம்.


அது எப்படி என்று கேட்க்கிறீர்களா ?

அது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. இங்கு கீழே சொன்ன முறைப்படி இப்பொழுதே உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய குறிப்புகளை ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் மற்றும் மாடல் நம்பரை தெரிந்துகொள்ள

Start > Run என்ற பட்டனை அழுத்தி msinfo32.exe என்று டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.


அடுத்து Run பட்டனை கிளிக் செய்து இங்கு சொன்ன எழுத்துக்களை டைப் செய்யுங்கள்.
Run ல் மேலே சொன்ன எழுத்துக்களை டைப் செய்து எண்டரை அழுத்தியதும் இங்கு கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதிலும் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய விபரங்கள் இருக்கும்.

இந்த System டிஸ்பிளேயில் நீங்கள் முக்கியமான உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள
Processor Type மற்றும் Ram -ன் அளவை தெரிந்துகொள்ளலாம்

அடுத்ததாக இதே தட்டில் தலைப்பில் Display என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். இதில் முக்கியமாக உங்கள் மதர்போர்டின் மாடல் நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கம்ப்யூட்டரில் மதர்போர்டு என்பது மிக முக்கியமான பகுதி. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விலை அதிகமான தரம் மிக்க உங்கள் மதர்போர்டை உங்களுக்கு தெரியாமல் ஒருவர் மாற்றிவிட்டு தரம் குறைந்த ஒரு போர்டை வைத்து உங்களிடம் தந்துவிடமுடியும். அதன் வித்தியாசம் உங்களுக்கு உடனே தெரியாது. அதனால் இந்த மாடல் நம்பரை வைத்துதான் நீங்கள் உங்கள் மதர்போர்டு சரியாகத்தான் உள்ளதா என தெரிந்துகொள்ள முடியும்.
உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு 320 GB, 250 GB, 160 GB, 100 GB, 80 GB, 40 GB, 20GB என்று பல அளவுகளில் இருக்கலாம் எதுவாக இருந்தாலும் சரி அதன் அளவு என்ன என்பதை பார்த்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதனை தெரிந்துகொள்ள உங்கள் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் உள்ள My Computer என்ற ஐக்கானை செலெக்ட் செய்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து கடைசியாக உள்ள Properties என்ற இடத்தை தொடுங்கள்
உடனே உங்களுக்கு கீழ் காணும் ஒரு தட்டு ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு என்ன என்பதை பார்த்து குறிப்பு எழுதி வைத்துக்கொள்ளலாம்
இங்கு மேலே உள்ள படத்தில் C டிரைவின் ஹார்டிஸ்கின் அளவு மட்டும் கிட்டத்தட்ட 50 GB என்று தெரியப்படுத்துகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் இன்னொறு டிரைவ் D என்ற பெயரிலும் இருக்கலாம் அதன் அளவு 30 GB என இருக்கலாம். அப்படி இருந்தால் உங்கள் கம்யூட்டரில் உள்ள மொத்த ஹார்டிஸ்கின் அளவு 80 GB என நீங்கள் கணக்கெடுத்துக்கொள்ளலாம்.

இங்கு சொன்ன முறைப்படி நீங்கள் உங்கள் Mother Board Model No, Manufactur Name, Processor Type, Ram Capacity, Hard Disk Capacity போன்ற விபரங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களை எவரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றி விட முடியாது.

domingo, 19 de febrero de 2012

நான் ரசித்த வைரமுத்துவின் பாடல் வரிகள்

முதல்வன் பட பாடல் வரிகள்-

சூரியன  ரெண்டு துண்டு 
செஞ்சு  கண்ணில்  கொண்டவளோ  ஆஹா ஓஓ
சந்திரன  கள்ளுக்குள்ள 
ஊற  வச்ச  பெண்ணிவளோ  ஆஹா ஓஓ
நீராக நானிருந்தால் உன்
நெத்தியில நான் இறங்கி
கூரான உன் நெஞ்சில்
குதிச்சு அங்கு குடியிருப்பேன்

ஒரு தடவ இழுத்து அணச்சபடி
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே
உன்முதுக துளைச்சு வெளியேற
இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே
             ################################################
ஜீன்ஸ் பட பாடல் வரிகள்-

பெண்ணே உனது மெல்லிடை பாத்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுத்தி போனேன்
ஆஆஆ அவனே வள்ளலடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்த்து
என்னை வதைப்பது கொடுமையடி

கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா 
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்த சுகம் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி
அங்கெ உனக்கொரு வீடு  செய்வேன்
உன் உயிர் காக்க என் உயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறை இடுவேன் 
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்கென்றே
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி
தீர்த்தமென்றே நான் குடிப்பேன்
               #######################################
சிவாஜி  பட பாடல் வரிகள்

தலை முதல் கால் வரை தவிக்கின்ற
தூரத்தை இதழ்களில் கடந்து விடு
உன் மீசையின் முடி என்ற மெல்லிய
சாவியில் குலன்களில் திறந்து விடு 

ஒரு வெண்ணிலவை மணக்கும்
மன்மதன் நான்
என் தேன் நிலவே ஒரு நிலவுடன்தான்
அவள் யாரும் இல்லை
இதோ இதோ இவள் தான்
                 ############################################
தாளம் பட பாடல் வரிகள்-

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெய்யில் தார் ஒழுகும் நகர  வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித்  துருவி உனை தேடுதே
உடையும் உரைகளிலும் தொலைந்த
காதலனை உருகி உருகி மனம் தேடுதே

முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பமது
நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம்
இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேக்குதே

பாறையில் செய்தது என் மனம் என்று 
தோழிக்கு சொல்லி இருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் நுழைந்து விட்டாய்
                                ###############################
புதிய முகம் பாடல் வரிகள்-

இந்த படத்தில் வரும் கண்ணுக்கு மை அழகு என்ற பாடலில் வரும் அத்தனை வரிகளும் மிகச் சிறந்தவை 

கள்வர்க்கு இரவழகு
காதலர்க்கு நிலவழகு
விடிகாலை விண்ணழகு
விடியும் வரை பெண்ணழகு

கடவுள் இல்லை என்றேன்
தாயைக் காணும் வரை
கனவு இல்லை என்றேன்
ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன்
உன்னைக் காணும் வரை
வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாசை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
                        ##################################
பம்பாய் பட பாடல் வரிகள்-

ஒரு மின்சாரப் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டு கொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டு கொண்டேன்
என்னை மறந்து விட்டேன்
இந்த உலகத்தில் நான் இல்லை நான் இல்லை
உன்னை மறந்து விட்டால்
எந்த மலரிலும் தேன் இல்லை தேன் இல்லை
இது கனவா இல்லை நினைவா
என்னைக் கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய் மொழி மறந்தேன்

மலர் கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன் 

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி தந்த போது 
மறு கண்ணும் தூங்கிடுமா  
        ######################################
ரோஜா பட பாடல் வரிகள்-

கண்ணுக்குள் நீதான் கண் நீரில்  நீதான்
கண் மூடிப் பார்த்தால் கண்ணுக்குள் நீதான்
தென்றல் என்னைத் தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்னப் பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்

வாய் இல்லாமல் போனால்
வார்த்தை இல்லை கண்ணே
நீ இல்லாமல் போனால்
வாழ்க்கை இல்லை கண்ணே

பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூக் கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப் பூப்பதில்லை

நீ அணைக்கின்ற வேளையில்
உயிர்ப் பூ வெடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால்
உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ                                                                  (இன்னும் இருக்கு)
            ################################################
தங்கத்தைப் பூட்டி வைத்தாய்
வைரத்தைப் பூட்டி வைத்தாய்
உயிரைப் பூட்ட ஏது பூட்டு
குழந்தை ஞானி இந்த இருவர் தவிர இங்கு
சுகமாய் இருப்பவர் யார் காட்டு

இந்த பூமி சமம் நமக்கு
நம் தெருவுக்குள் ஜாதிச் சண்டை
மதச் சண்டை வம்பெதற்கு 
                                                            இப்படியான மிகச்சிறந்த தத்துவ வரிகளையும் அவர் எழுதியுள்ளார் என்றாலும் வைரமுத்து என்றவுடன் அவருடைய காதல் வரிகளே என் நினைவுக்கு வருகின்றன(அதற்கு என் வயசும் ஒரு காரணமாக இருக்கலாம்) அடுத்த பதிவில் அவருடைய தத்துவ வரிகளை எழுதுகிறேன்.

த.ஸ்ரீதர்

sábado, 18 de febrero de 2012

அடேல் பாலசிங்கம் எழுதிய "சுதந்திர வேட்கை" என்ற நூலைப் பற்றிய எனது பதிவு.

         அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய "சுதந்திர வேட்கை" புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று நீண்ட நாள் அவாவில் இருந்தேன் இருந்தாலும் அது என் கைகளுக்கு கிடைக்கவில்லை. போன வாரம் அந்த நூலை வாசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது 480  பக்கங்களை கொண்ட ஓரளவு பெரிய நூல் தான்.  "தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் உள்ளிருந்து ஒரு நோக்கு" என்ற வாசகம் நூலின் முன் அட்டையில் ஆசிரியர் இட்டிருப்பது மிகப் பொருத்தமாக உள்ளது. அதோடு இந்நூலை தமிழ் ஈழ மக்களுக்கு அர்ப்பணம் செய்துள்ளார் மதிப்பிற்குரிய அடேல் அவர்கள். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் சம்மந்தமான பல ரகசியங்கள் இந்த நூலில் இருக்கும் என்ற எதிர் பார்ப்பு எனக்குள் இருந்தது. ஆனாலும் பெரும்பாலும் நான் கேள்விப்பட்டதும் பத்திரிகைகளில் வாசித்த விடயங்களுமே இந்நூலில் உள்ளது. ஆனாலும் அடேல் அவர்களைப் பற்றி  நான் பெரிதாக பத்திரிகைகளில் படித்ததாக நினைவில்லை. அந்த வகையில் அவரைப் பற்றியும், அவர் தமிழ் ஈழ போராட்டத்துக்கு ஆற்றிய மிகப்பெரிய பங்கையும், எம் மக்கள் மீதும் எங்களுடைய தனி ஈழப் போராட்டத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் அறியக் கூடியதாக உள்ளது.
         அடேல் அவர்களுக்கு எம் மண் புதிது, எம் மக்கள் புதிது, எம் கலாச்சாரம் புதிது எம் மக்களின் வாழ்க்கை முறை புதிது இப்படி எல்லாமே அவருக்கு சற்றும் பழக்கம் இல்லாத விடயங்களே. ஆன போதும் எம் மண்ணோடும் மக்களோடும் அவர்களது போராட்டத்தோடும் வெகு இலகுவில் ஒன்றிப்போனது மிகவும் ஆச்சரியத்துக்குரிய விடயம் தான். இவ்வாறு அவர் வெகு சீக்கிரத்தில் எம்மோடு ஒன்றிப்போனதன் காரணம் அவர் எம்மக்கள் மீது கொண்ட பாசமும், எங்களுடைய நியாயமான போராட்டத்தின் மீது கொண்ட நம்பிக்கையுமே என்பது இந்நூலை வாசிப்பதன் மூலம் அறியலாம்.
              மேலும் 1978  ல் அடேல் அவர்கள் பாலசிங்கத்தை திருமணம் செய்ததில் இருந்து 2000  ம் ஆண்டு பலா அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நோர்வே நாட்டில் மேற்கொள்ளப் பட்டது வரை அடேல் அவர்கள் இந்நூலில் விபரித்துள்ளார். இந்நூலை வாசிப்பதன் மூலம் பாலசிங்கம் அவர்கள் தமிழ் ஈழ போராட்டத்திற்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் எத்துணை முக்கியமானவர் என்பது நன்கு புலப்படும். அவர் விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பையும் அவருடைய ஆளுமையையும் நன்கு அறிந்து கொள்ளலாம். மேலும் அடேல் அவர்கள் தமிழ் ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் தான் சந்தித்த இடர்களையும்,கஷ்டங்களையும்,துன்பங்களையும் தான் சார்ந்த தனிப்பட்ட சங்கடங்களையும் மிகத் தெளிவாக விபரித்துள்ளார். தமிழ் நாட்டில் நிலவும் வறுமையையும், தமிழ் ஈழத்தில் நிலவும் சாதி முறமை, சீதன முறமை போன்றவற்றையும் மேலோட்டமாக இந்நூலில் தொட்டுச் சென்றுள்ளார். மேலும் பெண் விடுதலைப்   புலிகள் பற்றியும் அவர்களுடைய வீரம்,அர்ப்பணிப்பு  ஈழப் போராட்டத்திற்கு அவர்களுடைய பங்களிப்பு , அவர்களுடைய தியாகம் போன்ற விடையங்களை மிக ஆழமாக விபரித்துள்ளார். மேலும் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் முக்கியமாக தேசிய தலைவர் அவர்கள் அடேல் அவர்களின் மீது கொண்டிருந்த மரியாதையும்,நம்பிக்கையும் அவரின் தனித்துவத்தை நன்கு உணர்த்துகின்றன. அடேல் அவர்கள் இதற்கு முதல் எழுதிய "விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்" என்ற நூலைப்பற்றி  தவறான விமர்சனம் செய்த "ராதிகா குமாரசாமி" அவர்களுக்கு இந்நூலில் மிகச் சிறப்பாகப் பதில் அளித்துள்ளார். ஆக மொத்தத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்ணாக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தை நன்கு புரிந்து தன்னையே அப்போராட்டத்திற்காக அர்ப்பணித்துள்ளது அவர் மேல் ஒரு கூடுதல் மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக ஈழ விடுதைலையை நேசிக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய நூல் இது.

த.ஸ்ரீதர்

viernes, 17 de febrero de 2012

இந்திய இசையின் புதிய பரிமாணம் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்

                    வீட்டின் ஒரே ஆண் பிள்ளை ஏ.ஆர் ரஹ்மான்(அல்லா ராகா ரஹ்மான்) 1966 ஜனவரி 06ம் திகதி சென்னையில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். தாய் தந்தையர் ஏ. ஆர். ரஹ்மானுக்குச் சூட்டிய பெயர் திலீப் குமார் என்பதாகும். இஸ்லாத்தைத் தழுவிய பின்னரே ஏ. ஆர். ரஹ்மான் என அழைக்கப்பட்டார்.  இவருடைய 11 வது வயதில் தந்தை ஆர்.கே சேகர் இறந்து போக மொத்த குடும்பத்தையும் வறுமை ஆட்கொண்டது. அப்படிப்பட்ட வீட்டு பிரச்சினையிலும் ரஹ்மானுக்கு இசையின் மேல் இருந்த ஆர்வத்திலும் அவரது விடா முயற்சியிலும் பல முன்னணி இசை அமைப்பாளர்களிடமும் இசை பயின்று இன்று உலக அளவில் மிக முக்கிய இசை அமைப்பாளராகத் திகழ்கின்றார்.
                     இந்திய இசை அமைப்பாளர்களை டிஜிட்டல்  இசை நோக்கி பயணிக்க வைத்தார். உலக இசையை இந்தியாவிற்கு கொண்டு வந்த பெருமையும், இந்திய இசையை உலகுக்கு கொண்டு சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இந்திய சினிமாவை இவர் பின்னால் வர செய்தார். இந்திய சினிமாவும் இந்திய ரசிகர்களும் எங்களுக்கும் கிடைக்குமா என பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த ஆஸ்கர் விருதுகள் 2 ஐ எடுத்து இந்திய இசை வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.  
                       இவர் ஆஸ்கர் விருது பெற்றதை  ஒடுமொத்த இந்தியர்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இவர் ஆஸ்கர் மேடையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று தமிழில் பேசியதால் அவரது வெற்றியை  உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் கொடாடினார்கள். அந்த தமிழ் பேச்சினால் அவரது இனப்பற்றையும் மொழிப்பற்றையும் தமிழினம் நன்கு அறிந்து கொண்டது.
                        ரஹ்மானின் இசை எல்லோயும் ஆட்டம் போட வைத்திருக்கிறது. அவரது ஒலி நுட்பங்கள் உள்ளுக்குள் ஏதேதோ உணரச் செய்கின்றது இளசுகளின் மனங்களை துள்ள செய்கின்றது. இசை மட்டும் இல்லை அவரது வாழ்க்கையில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அடக்கம், பணிவு, புதுமை, தேடல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.    
                        ரஹ்மானின் ரசிகன் என்ற வகையில் அவருடைய ஆரம்ப வாழ்க்கையை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இணைய தளங்களில் தேடிய போது N.சொக்கன் எழுதி வெளி வந்திக்கும் "ஏ.ஆர் ரஹ்மான்" என்ற புத்தகத்தில் அவரைப்பற்றி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆர்.கே சேகரின்  இசை வாழ்கையில் தொடக்கி அஸ்கர் வரையான ரஹ்மானின் இசைப்பயணத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது. 14  அத்தியாயங்களை கொண்ட இந்த புத்தகத்தில் ரஹ்மான் ரோஜா படத்திற்கு இசை அமைத்தது பற்றி சொல்லி இருப்பது 7 வது அத்தியாயத்தில் தான். அதனால் கிட்டத்தட்ட பாதி புத்தகம் ரஹ்மானின் சினிமாவிற்கு முந்திய வாழ்வைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. 
                        
                                   புத்தகத்தில் இருந்து சில முக்கிய தகவல்கள்.

                      ரஹ்மானின் முதல் திரைப்பட பாடல் எது? ரோஜா பட பாடல் சின்ன சின்ன ஆசையா? இல்லை 1975 ல் வெளிவந்த "பென்படா" என்ற மலையாளப் படத்தில் வர "வெள்ளித்தேன் கிண்ணம் போல்" என்ற பாடல். இந்த படத்திற்கு இசை அவரது தந்தை ஆர்.கே சேகர். பாடல் ஒலிப்பதிவின் போது 9 வயது திலீப் விளையாட்டாக ஹார்மோனியத்தில் எதோ வாசித்து காட்ட அது அங்கிருந்த எல்லோருக்கும் பிடித்து விட அந்த மெட்டே பாடலாகியது. தந்தை இறந்த பிறகு இஸ்டுடியோ இஸ்டுடியோவாக அலைந்த அவரால் நன்றாகப் படிக்க முடியவில்லை. இந்த கால கட்டத்தில் திலீப் கிட்டத்தட்ட எல்லா இசை அமைப்பாளர்களிடமும் இசை அமைத்திருக்கின்றார். எம். எஸ் விஸ்வநாதனிடம் தொடங்கி டி.ராஜேந்தர்,ராஜ்கோட்டி என்று இளைஜராஜா வரை இவர் வேலை பார்த்திருக்கின்றார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொண்டு இன்று தனித் திறமையுடன் மிளிர்கின்றார்.
                            ரஹ்மான் இசையை தவிர கார் ஓட்டவும்  கற்றுக்கொண்டார். சினிமாவில் பிரச்சினை ஆகிவிட்டால், டிரைவர் ஆகி விடலாம் என்று நினைத்திருக்கிறார்.
                            ரஹ்மான் விளம்பரத்துறையில் இருந்த போது, அவரின் இசை இந்தியாவெங்கும் கொடிக்கட்டி பறந்தது. உதாரணத்திற்கு, டைட்டன் விளம்பரத்தில் வரும் கீ-போர்டு இசை, அரவிந்த்சாமி வரும் லியோ காபியின் வீணை இசை, ஏசியன் பெயிண்ட்ஸ் பொங்கல் விளம்பரம், சிந்தால் சோப், பிரிமியர் குக்கர், கார்டன் சாரிஸ் விளம்பரங்களின் இசை இவையெல்லாம் அந்நேரத்தில் ரஹ்மான் பற்றி அறியாமலே, எல்லோரையும் கவர்ந்திருந்த விளம்பரங்கள். அந்த இசை துணுக்குகளை இப்போது கேட்டாலும் சொல்வோம், என்ன விளம்பரம் என்று.
எந்த சினிமாவையும் வேலை நேரத்தில் விரும்பி பார்க்காத ரஹ்மான், ஏதோ தோன்றி, ஒரு நண்பருடன் ப்ரிவ்யூ சென்று பார்த்த படம் - தளபதி. இளையராஜா-மணிரத்னம் கூட்டணியின் கடைசி படம். படம் முடிந்த பிறகு, வழக்கத்திற்கு மாறாக, கொஞ்சம் அதிக நேரம் ரஹ்மானுடன் மணிரத்னம் பேசியிருக்கிறார். சந்திப்புக்கள் சந்தர்ப்பமாக மாற  ரோஜாவிற்கு இசை அமைக்க ஒப்பந்தமானார் ரஹ்மான்.
இப்படி நிறைய சுவாரஸ்ய தகவல்களை இந்த புத்தகத்தில் ஆசிரியர் தொகுத்தளித்திருக்கிறார்.
                            அவர் தேடி தேடி கற்றுக்கொண்ட பலவகை இசை வடிவங்கள், அவருடன் இணைந்த தமிழின், இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள், அவர் அறிமுகப்படுத்திய பாடகர்கள் பற்றிய தகவல்கள் - ரஹ்மானின் திறமையை, பெருமையை எடுத்துரைப்பதாக இருக்கிறது. தமிழ் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தவர் ஆஸ்கரை நெருங்கியது எப்படி என்பதை தமிழை தாண்டி, தெலுங்கு, ஹிந்தி, இந்திய ஆல்பம், லண்டன் மேடை நாடகம், ஆங்கில சினிமா என்று சென்ற அவரின் இசைப்பயணத்தை வாசித்து தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம். அவரது இசைப்பயணம் தொடர எம் வாழ்த்துக்கள்.
    
                        ஏ.ஆர் ரஹ்மான் பெற்ற முக்கியமான விருதுகள் பற்றிய விபரம் வருமாறு:-
* Grammy விருது- 2 முறை
* MTV Asia விருது- 2 முறை
* MTV வீடியோ இசை விருது- 1 முறை
* Academy விருது- 2 முறை 
* BAFTA விருது- 1 முறை* Golden Globe விருது- 1 முறை
* Satellite விருது- 1 முறை
* World Soundtrack விருது- 1 முறை
* தேசிய திரைப்பட விருது- 4 முறை
* Filmfare விருது- 14 முறை
* Filmfare(தெற்கு) விருது- 12 முறை
* தமிழ்நாடு மாநில விருது- 6 முறை
* விஜய் விருது- 1 முறை
* Oscar விருது- ஒரே தடவையில் 2 விருதுகள் பெற்றார்.
த.ஸ்ரீதர்(ஸ்பெயின்) 
நன்றி

jueves, 16 de febrero de 2012

மருதடி வாழ் இளைஞர், யுவதிகளுக்கு ஒரு வேண்டுகோள்

எம்மூரில் நடைபெறும் பொதுவான நிகழ்வுகள் அதன் புகைப்படங்கள், ஒளிப்படங்கள் போன்றனவற்றை இந்த வலைத்தளத்தில் இடுவதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் எம் ஊர் உறவுகள் அதைப்பார்த்து மனம் மகிழுவர். அவ்வாறான நிகழ்வுகள் அதன் புகைப்படங்கள், ஒளிப்படங்கள் போன்றனவற்றை இந்த வலைத்தளத்தில் இடுவதற்கு அவற்றை தந்துதவுமாறு எம் ஊர் இளைஞர் யுவதிகளிடம்  பணிவாக கேட்டுக்கொள்கின்றேன். அது மட்டும் அல்லாமல் எம் ஊர் இளைஞர் யுவதிகளின் தனிப்பட்ட ஆக்கங்களான கவிதை , சிறுகதை, கட்டுரை, விஞ்ஞானம் சார்ந்த விடயங்கள் ,கணணி சார்ந்த விடயங்கள் மேலும் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் விடையங்களையும் எழுதி அனுப்பலாம். இதன்மூலம்ஒருவர் தனது தனிப்பட்ட திறமைகளை  வளர்த்துக்கொள்ளவும் முடியும், அவரது திறமையை மற்றவர் அறிந்து கொள்ளவும் முடியும்.  அத்தோடு எம் ஊரின் வலைத்தளமான இந்த மருதடி வலைத்தளத்தை வளர்க்கவும் முடியும் என நான் நம்புகின்றேன். எனவே இதை எல்லோரும் விரும்பி செய்வீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். உங்கள் எல்லோரது உதவியையும் எதிர்பார்த்து காத்திருக்கும்  உங்கள் ஊரின் இளைஞன்(உங்கள் ஊரில் 11வருடம் வசித்த உரிமையில் அவ்வாறு எழுதுகிறேன்)
த.ஸ்ரீதர்
நன்றி

மருதடி முருகன் ஆலயம்






miércoles, 15 de febrero de 2012

கடுப்பேதிறார் மை லாட்...

நோயாளி- டாக்டர் எனக்கு தூர பார்வ சரியா தெரியுதில்ல
டாக்டர்- ஓஒ அப்பிடியா சுமாரா எவ்வளவு தூரம் தெரியுது ஐயாவுக்கு
நோயாளி-மேல போற விமானம் எல்லாம் நல்ல தெரியுது ஐயா
டாக்டர்- அபப பிறகென்ன ஐயா உங்களுக்கு தூர பார்வை பிரச்சினையே இல்லையே
நோயாளி-ஆனா உள்ள இருக்கிற சனம் தெரியுதில்லையே ஐயா


ஆசிரியர்- சைகிள்லையா, பஸ்லயா நிறைய பொருட்கள்    ஏத்தலாம்                                                                                                      சின்ன பையன்- சைக்கிள்ளதான் டீச்சர்
ஆசிரியர்- எப்பிடி சொல்லுறாய்
சின்ன பையன்-பஸ் போகும்போது பஸ்டாண்ட தூக்கிட்டு போறதில்ல 
ஆனா சைக்கிள் போகும் போது சைக்கிள்ஸ்டாண்ட தூக்கிட்டு போகுது தான டீச்சர்